top of page

மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை ....

  • Writer: Dhivyachaban
    Dhivyachaban
  • Aug 7, 2024
  • 1 min read

அதிக சம்ஸ்கிருத ஞானமில்லாத ஒருத்தர் ரொம்பவும் பக்தியோடு தினமும் 108 தடவை சொல்லி வந்தார்.  “பத்மநாபோ, மரப்பிரபு ”.

“பத்மநாபோ, அமரப்பிரபு” என்று பதம் பிரித்துச் சொல்றதுதான் சரி. அமரர்களின் (தேவர்களின்) பிரபுவே அரசனே என்று  அதற்கு அர்த்தம்.

ஆனால் “மரப்  பிரபு”. என்று  தப்பாகப் பதம்  பிரித்தவர் மரங்களுக்கு அரசனே  என்று  அர்த்தம்  பண்ணிக்கொண்டார். அந்த அர்த்தத்துக்கு ஏற்ப ஊர் கோடியிலிருந்த அரச மரத்தைச் சுற்றி வந்து பத்மநாபோ  மரப்  பிரபு  என்று  தினமும் 108 பிரதட்சணம் பண்ணினார்.

அந்த  வழியே போன ஒரு சம்ஸ்கிருத பண்டிதர் இதைப் பார்த்து நடுங்கி போயிட்டார். தவறாக உச்சரித்தவரை நிறுத்தினார், திருத்தினார். நீர் ரொம்ப உசந்த காரியம் தான் பண்றீர். ஆனால்  வாக்கு சரியில்லை. பத்மநாபோ, அமரப் பிரபு  அப்படின்னு சொல்லணும் என்று  கூறி அர்ததத்தையும் விளக்கினார். தவறக உச்சரித்தவர் ரொம்பவும்  வேதனைப்பட்டு அடாடா, தெரியாமலே சொல்லிவிட்டேனே .. எனக்குப் பாவம் சம்பவிக்குமா என்று  கவலயுடன் கேட்டார்.  

அதெல்லாம் சம்பவிக்காது. தெரியாமல் சொன்னதற்கு தோஷமில்லை. இனிமேல் அப்படிச் சொல்லாமல் சரியாகச் சொல்லு என்றார், திருத்தினார்.

மறுநாளிலிருந்து திருத்தி உச்சரிக்க ஆரம்பித்தார். முதலாமவர் மரப்  பிரபு  அல்ல என்பதால் மரத்தைப் பிரதட்சணம் பண்ணுவதையும் நிறுத்தி விட்டார். வாசல் திண்ணையில் உட்கார்ந்தபடியே பத்மநாபோ அமரப்  பிரபு என்று  சொல்லி  வந்தார்.

அன்று இரவு, திருத்திய வித்வானின் சொப்பனத்தில் பகவான் வந்தார்.  உம்மை யாரு சம்ஸ்கிருதம் படிக்க சொன்னா? அப்படியே படிச்சதுதான் படிச்சீர் அந்த பக்தரை யாரு திருத்தச் சொன்னா? நீர் திருத்திய பிறகு அவர் மரத்தைப் பிரதட்சணம் செய்யறதை நிறுத்திட்டார். அப்படியானால் நான் மரங்களுக்குப் பிரபு இல்லையா? உமக்கு விஷ்ணு புராணம் தெரியாதா?

ஜ்யோதீம்ஷி விஷ்ணு:,  புவனானி விஷ்ணு:, வநாணி விஷ்ணு:  என்று  பராசர மஹரிஷி சொன்னது தெரியாதா?

(ஜ்யோதீம்ஷி  = ஒளி, புவனானி = உலகங்கள், வனானி = காடுகள்)


நீர் திருத்திச் சொன்னதால் 108  பிரதட்சணங்கள் செய்யறதை அவர் நிறுத்தினார்.  திரும்பவும் போய் அவரிடத்திலே சொல்லும் மரப் பிரபு என்றே சொல்லச் சொல்லு என்று கோபித்துக் கொண்டார் பகவான். குழந்தை சரியாக உச்சரிக்காவிட்டாலும் மகிழ்ச்சியோடு நாம் கேட்கவில்லையா? அது போல்தான் எல்லையற்ற கருணையுடைய பகவானும் நம்மைக் குழந்தைகளாய்ப் பாவித்துக் கேட்கிறான்.

மனதார செய்யும் பிரார்த்தனைகள் கடவுளின் அருகே செல்கிறது!!!!

Comments


bottom of page